செங்கல்பட்டு: நூறாண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்கள் அரசுக்குத்தான் சொந்தம் என மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் குழம்பிஸ்வரர் ஆலய புதுப்பிக்கும் பணியின்போது தங்கப்புதையல் கிடைத்துள்ளது. கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல் 100 ஆண்டு பழைமையானதாக இருந்தால் அது அரசுக்குத்தான் சேரும் என கூறியுள்ளார்.