தெலங்கானாவில் 6 ஏர்போர்ட்: சந்திரசேகர ராவ் வலியுறுத்தல்

புதுடெல்லி: தெலங்கானாவில் 6 புதிய விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய அரசிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியையும் சந்தித்தார். பின்னர்,அவர் அளித்த பேட்டியில், ‘‘தெலங்கானாவில் தற்போது ஐதராபாத் விமான நிலையம் ஒன்றுதான் உள்ளது. இதனால், கூடுதலாக 6 விமான நிலையங்களை அமைக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதால், நிஜாமாபாத் மாவட்டம் உள்ளிட்ட 6 இடங்களை அதற்காக பரிந்துரைத்தோம். இந்த இடங்களில் மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேலும் விரைவுபடுத்தும்படி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்,’’ என்றார்.

Related Stories: