புதுடெல்லி, :டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்ட களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி - அரியானா எல்லையான சிங்கு எல்லையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி வடமாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிங்கு எல்லையில் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க கான்கிரீட் தடைகள் மற்றும் பல அடுக்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சிங்கு எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியதாலும், போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் அங்கு கொரோனா தொற்று பரவுவதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.