சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் நடிகை காயத்ரி சாய்(55). இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரும் கோவையை சேர்ந்த விஸ்வதர்ஷினி என்பவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்துள்ளனர். இதனால் காயத்தரி சாய்யை பழிவாங்க, அவரது மகளுடன் நடிகர் விஷாலை இணைத்து அவதூறு கருத்துகளை யூ-டியூப்பில் விஸ்வதர்ஷினி வெளியிட்டார். இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை காயத்ரி சாய் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விஸ்வதர்ஷினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் நடிகை காயத்ரி சாய் பல ஆண்டுகளுக்கு முன்பாக தன் கணவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் விஸ்வதர்ஷினி பதிவேற்றம் செய்துள்ளார்.