ஆவடி: ஆவடி அடுத்த காட்டூர் செல்வி நகர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் நிரஞ்சன்(20) மற்றும் விஜய்(20). நண்பர்கள். இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம். இருவரும் காட்டூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிரஞ்சன், விஜய் இருவரும் பணி முடிந்து கம்பெனியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் காட்டூர் தனியார் பாலிடெக்னிக் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 3 பேர் இவர்கள் இருவரையும் வழிமறித்தனர். பின்னர், அவர்களில் ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி வந்து விஜயிடம் இருந்த செல்போனை பறித்தான்.