மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் 9வது நாளாக விவசாயிகள் போராட்டம்..!!

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் 9வது  நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கைவிட வேண்டி விவசாயிகள் கடும் பனியில் போராடி வருகின்றனர். பஞ்சாப், உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விளை நிலங்கள் பெரு நிறுவனங்கள் வசமாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: