மும்பை: பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மதோங்கர் , முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கேரயின் முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார்.கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ஊர்மிளா மதோங்கர், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி வெற்றி பெற்று எம்.பி.யாகிவிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். மும்பை காங்கிரஸ் தலைவர்கள் இடையே நிலவும் கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் அந்த கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.