பூந்தமல்லி: தீபாவளி சீட்டு நடத்தி, பல லட்சத்துடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை கைது செய்ய கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போரூர் நான்கு சாலை சந்திப்பில் மனோஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். இவர், மாதம்தோறும் ரூ.500 முதல் ரூ.1500 வரை தீபாவளி நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணம் கட்டி வந்தனர்.கட்டிய தொகைக்கு ஏற்ப நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், அதன்படி வழங்கவில்லை. சீட்டு கட்டியவர்கள் இதுபற்றி கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், விரைவில் கொடுத்து விடுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.