பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 40 பேரிடம் ஆலோசனை நடத்தினோம். இதுபோல் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் கருத்துக்களை பெறுவதற்கு முடிவு செய்துள்ளேன் என டிகே சிவகுமார் கூறினார். பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பஞ்சாயத்துராஜ் தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து டிகே சிவகுமார் கூறுகையில்,” காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைகள் பெறுவதற்கான முயற்சி இது ஆகும். இது போன்ற ஆலோசனைகள் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், அடுத்து வருகிற பொது தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. நில சீர்த்திருத்த சட்ட திருத்தங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.