நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை ரொக்ககுத்தகையிலிருந்து தென்கரைவாயல் வழியாக பாமனிசாலையில் இணையும் மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ரொக்ககுத்தகை என்ற ஊரிலிருந்து தென்கரைவாயல் கிராமம் வழியாக பாமனி செல்லும் இணைப்புச் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.