நீடாமங்கலம்-மன்னார்குடி சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை ரொக்ககுத்தகையிலிருந்து தென்கரைவாயல் வழியாக பாமனிசாலையில் இணையும் மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ரொக்ககுத்தகை என்ற ஊரிலிருந்து தென்கரைவாயல் கிராமம் வழியாக பாமனி செல்லும் இணைப்புச் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.

இந்த சாலை வழியாக ரொக்ககுத்தகை, கிளாஞ்சிமேடு, பருத்திக்கோட்டை, தென்கரைவாயல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்லும் முக்கிய சாலையாக இச்சாலை உள்ளது. இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்று செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் சென்று பார்வேயிட்டு மோசமான கப்பி சிலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: