ஏழுமலையானுக்கு 7,754 ஏக்கர் நிலம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள், பணம், நகை, நிலங்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில், கோயிலின் சொத்து விவரங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நவம்பர் 28ம் தேதி வரை, நிகர சொத்து 7,754 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. இதில், விவசாய நிலங்கள் 1,793 ஏக்கரும், விவசாயம் அல்லாத மற்ற நிலங்கள் 5,964 ஏக்கரும் உள்ளன. 1974-2014 வரை பக்தர்கள் தந்த சொத்தில் 335 ஏக்கர் விற்கப்பட்டு ரூ.6.13 கோடி பெறப்பட்டுள்ளது.,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: