மார்த்தாண்டம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏர் கலப்பை பேரணி நேற்று தொடங்கியது. மார்த்தாண்டம் அருகே மேல்புறம் சந்திப்பில் நேற்று மாலை ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் முதலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜயதரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் பிரின்ஸ் எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலத்த மழையிலும் காங்கிரசார் தடையை மீறி ஏர்கலப்பை பேரணியை தொடங்கினர். போலீசார் பேரிகார்டு வைத்து தடுத்து 50 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்தனர்.