மயிலாடுதுறை: நிவர் புயல் காரணமாக மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்றுகாலை மயிலாடுதுறை அருகே பேச்சாவடியில் திருவாரூர் சாலையில், 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, மிகப்பெரிய புளிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.