டெல்லி : உணவு பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலம், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், உணவு பதப்படுத்துதல் துறையின் பங்குதாரர்களுடன் காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உணவு பதப்படுத்துதல் நிலையங்களை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தொழில்துறை பிரதிநிதிகள் அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.