புதுடெல்லி: மின்சார வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 69,000 பெட்ரோல் பங்க்கில் ‘இ-சார்ஜ்’ வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ‘வாகன சேவைகள் - 2020, மின்சார போக்குவரத்து மாநாடு - 2020, புதிய நடைமுறையில் வாய்ப்புகளை பெறுதல்’ என்னும் காணொலி மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. காற்று மாசை குறைப்பதற்கான விரிவான லட்சியத்தை அடைய வாகன உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.