செங்கல்பட்டு: புறநகர் மின்சார ரயில்களில், நேற்று காலை 10 மணி முதல் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு பகுதியில் இருந்து ஏராளமான தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் பயணம் செய்தனர்.
கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல் மின்சார ரயில்கள் இயக்குவதை தென்னக ரயில்வே நிறுத்தியது. பின்னர், மாநில அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்னர், பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், நடுத்தர மக்கள், பஸ்களில் டிக்கெட் எடுத்து செல்ல அதிக செலவு ஏற்பட்டது. இதனால், மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் 23ம் தேதி முதல் பெண்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்தது.