ஐஎஸ்எல் கால்பந்து; கோவா-பெங்களூரு இன்று மோதல்

பனாஜி: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2வது லீக் ஆட்டத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல்பாதியில் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை.

2வது பாதியில் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் கவுகாத்தி வீaரர் குவேஸி அப்பியா கோல் அடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்க மும்பை கடைசிவரை போராடியும் முடியவில்லை. முடிவில் 1-0 என கவுகாத்தி வெற்றி பெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு கோவா-பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன.

Related Stories: