சென்னை: பாஜவுடன் கருத்தியல் ரீதியாக வாதாட தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திட்டமிட்டு அவதூறு பரப்பும் பாஜவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாஜவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் பேசியதாவது: கடந்த 10 நாட்களில் மட்டும் 3 போராட்டங்களை விசிக நடத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் நூல்களை யார் எழுதியிருந்தாலும் அதை தடை செய்ய வேண்டும்.