கொல்கத்தா,:மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் அரசியல் ரீதியாகவும், சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாகவும் முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்று டெல்லியில் சந்தித்து மாநில அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், ‘ஆளுநர் ஜகதீப் தங்கர் மாநிலத்தின் புகழை கெடுக்க முயற்சிக்கிறார். அவர் பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் போல பேசுகிறார்.