ராஜபாளையம்: ராஜபாளையம் காந்திசிலை அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் 300க்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு இம்மருத்துவமனைக்கு தான் வருகின்றனர். கடந்த 2 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் மழை பெய்து வருவதால் அரசு மருத்துவமனை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.