புதுடெல்லி,:காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுவில் 155.7 டி.எம்.சி தண்ணீர் வரத்து கணக்கிடப்பட்டுள்ளது என நேற்று நடந்த 37வது ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது தமிழக அரசு தரப்பில் புள்ளிவிரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி ஒழுங்காற்று குழுவின் 37வது கூட்டம் வீடியோ கான்பரனஸ் மூலம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று நடந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5மணி வரை நடைபெற்றது. இதில் நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் பட்டாபிராமன் மற்றும் உறுப்பினர்கள் ராமமூர்த்தி, திருவேட்டை செல்லம் ஆகியோர் திருச்சி அலுவலகத்தில் இருந்து பங்கேற்றனர்.