திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா (58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (63). இவரும், இவரது மகன் இமானுவேலும் (30) சேர்ந்து மாலத்தீவில் 200 கோடி மதிப்பிலான கட்டுமான பணி டெண்டர் எடுத்து தருவதாக ஜீவாவிடம் தெரிவித்துள்ளனர். மேலும்வெளிநாட்டு தனியார் நிதி நிறுவனங்களிடம் 600 கோடி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கு 40 லட்சம் முன் பணம் தர வேண்டும் என கேட்டனர். 600 கோடி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜீவா கடந்த ஆண்டில் 40 லட்சம் கொடுத்துள்ளார்.