ஐபிஎல் டி20 தொடர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டெவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  19.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

Related Stories: