புதுடெல்லி: ‘‘பெண்கள் துர்கையின் அடையாளம். அவர்களுக்கு அதிகளவில் அதிகாரங்கள் வழங்க, மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது,’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே துர்கா பூஜை திருவிழா நடந்து வருகிறது. 5வது நாள் விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. கொல்கத்தாவின் சால்ட் ஏரி அருகே பாஜ சார்பில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலை, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ‘‘துர்கா பூஜை பண்டிகையானது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வலிமையை பிரதிபலிப்பதாக உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு இடையே நாம் இந்த விழாவை கொண்டாடுகிறோம். அனைத்து பக்தர்களும் முன்மாதிரியான கட்டுப்பாட்டை காட்டியுள்ளனர்.