உலக உணவு தினத்தையொட்டி பிரியாணி ‘ப்ரீயாக’ விநியோகம் 5 பைசாவுக்கும் வழங்கி அசத்தல்: திண்டுக்கல் ஓட்டல்களில் திரண்ட மக்கள்

திண்டுக்கல்: உலக உணவு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் ஓட்டல் உரிமையாளர்கள் இலவசமாகவும், 5 பைசாவுக்கும் சிக்கன் பிரியாணி வழங்கி அசத்தினர். உலக உணவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி உணவகத்தில் முதலில் வரும் 300 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலையிலே அக்கடையில் பொதுமக்கள் குவிந்தனர். முதலில் வந்த 300 பேருக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள மற்றொரு பிரியாணி உணவகத்திலும் பழைய 5 காசு கொண்டு வரும் முதல் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என சமூக வலைத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இங்கேயும் ஆண்கள், பெண்கள் என பலர் போட்டி போட்டுக் கொண்டு காலை முதலே காத்திருந்தனர். இவர்களிடம் 5 பைசா நாணயத்தை பெற்று அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது.

Related Stories: