திண்டுக்கல்: உலக உணவு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் ஓட்டல் உரிமையாளர்கள் இலவசமாகவும், 5 பைசாவுக்கும் சிக்கன் பிரியாணி வழங்கி அசத்தினர். உலக உணவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி உணவகத்தில் முதலில் வரும் 300 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலையிலே அக்கடையில் பொதுமக்கள் குவிந்தனர். முதலில் வந்த 300 பேருக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.