விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளுக்கான இட ஒதுக்கீடு வழங்க கோரி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடந்தது.செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் இரா.தமிழரசன் தலைமை வகித்தார் செங்கல்பட்டு  சட்டமன்ற தொகுதி செயலாளர் தென்னவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் தேவஅருள் பிரகாசம், ராஜ்குமார், ஆதவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல செயலாளர் சூ.க.விடுதலைசெழியன், துணை பொது செயலாளர் வன்னியரசு ஆகியோர்  கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

Related Stories: