கரூர்: கையடக்க செயற்கைகோளை கண்டுபிடித்த கரூரை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்களை அமெரிக்கா நாசா மையம் பாராட்டியுள்ளது. கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் 11 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு போட்டி நடத்தி வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பள்ளியை சேர்ந்தவர் கேசவன்(18). தாந்தோணிமலையை சேர்ந்தவர் அட்னன்(18). கரூர் தென்னிலையை சேர்ந்தவர் அருண்(19). கேசவன் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியிலும், அட்னன், அருண் ஆகிய இருவரும் கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.