ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்:  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து  நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதேபோல், மேட்டூர்  அணைக்கு நேற்று முன்தினம் 11,024 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 22,969 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து   பாசனத்திற்காக 16,950 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 97.63 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 98.03 அடியானது. நீர்இருப்பு 62.31 டிஎம்சியாக உள்ளது..

Related Stories: