நகர்கோவில்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாகர்கோவிலில் அவர் நேற்று அளித்த பேட்டி: கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எல்லா கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி அமைவதை விரும்புவார்கள்.
தேர்தல் நெருங்கி வரும்போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள்.