டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். ஆந்திராவுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் கடப்பா எஃகு ஆலை திட்டம், போலாவாராம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிலுவையில் உள்ள தொகையை விடுவிப்பது ஆகியவை தொடர்பாக பிரதமரிடம் ஜெகன் மோகன் ரெட்டி விவாதித்தார்.