பூங்காவில் 2 சிறார்கள் இறந்த நிலையில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது, அதில்,”‘குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள், மின் இணைப்புகளை அவ்வப்போது மின்வாரிய ஊழியர்களை கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையோரங்களில் மின்சார பராமரிப்பு பணி நடைபெறும் பகுதிகளில் கவனமாக செல்ல வேண்டும். பூங்காக்கள் போன்ற இடங்களில் மின் இணைப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். சுவர்களிலும் மேற்கூரைகளிலும் ஈரப்பதம் இருந்தாலோ அல்லது மழை நீர்க்கசிவு ஏற்பட்டாலோ சரிசெய்யுங்கள். இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள், மரங்கள், மரக்கிளைகள் இருந்தால் மாநகராட்சிக்கு சொல்ல வேண்டும். வீடுகளில் மின்சாரப் பழுது ஏற்பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மூலம் சரி செய்ய வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பூங்காக்கள் போன்ற இடங்களில் மின் இணைப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் : கோவையில் 2 சிறார்கள் இறந்த நிலையில் காவல்துறை எச்சரிக்கை!! appeared first on Dinakaran.