மதுரை: மதுரையில் கிசான் திட்டத்தில் மோசடி 3,930 பேரிடம் ரூ.1.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி பயனாளிகள் 3,930 பேரிடம் இருந்து பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள் பெயரில் மோசடி நடந்துள்ளதை அடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.