பெங்களூரு: சசிகலா விடுதலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில் தன்னை பற்றிய தகவல்களை 3வது நபரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் அனுப்பி இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாகிறார். மேலும் சசிகலா செலுத்த வேண்டிய ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாவார் என பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ஆர்.ஐ.டி.-யின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு சிறைத்துறை விளக்கம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.