நெய்வேலி: கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் தோமையார் நகரில் மாதாகோயில் அமைந்துள்ளது. இந்த மாதாகோயில் எதிரில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இச்சாலை விக்கிரவண்டி- தஞ்சாவூர் செல்லும் சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இச்சாலை வழியை பயன்படுத்தி வருகின்றனர்.