சேறும், சகதியுமான மஞ்சனக்கொரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அன்பு அண்ணா காலனி, ரிச்சிங் காலனி, மஞ்சனக்கொரை, வெல்பெக் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏழை எளிய மக்களான இவர்கள் ஊட்டி நகரில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அன்பு அண்ணா காலனியில் இருந்து மஞ்சனக்கொரை செல்லும் சாலையில் பம்ப்அவுஸ் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சாலை பலத்த சேதமடைந்து ேசறும்,சகதியுமாக மாறியது.  இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். எனவே அன்பு அண்ணா காலனி - மஞ்சனக்கொரை வரையிலான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: