கரூர் : தமிழ்நாட்டில் பாடத் திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 196 கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழக அரசின் பாடத் திட்டத்தின் தரத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.