நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா: தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்

நாகர்கோவில்: நாகர்கோவில் புத்தேரி சக்தி கார்டன் பகுதியில் தெருவில் சுற்றி திரிந்த நாய் ஒன்று, பிளாஸ்டிக் டப்பாக்குள் தலையை விட்டுவிட்டு வெளியே எடுக்கமுடியாமல் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டு இருந்தது.

இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

நிலைய அதிகாரி துரை தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை, கட்டிங் இயந்திரம் மூலம் அகற்றினர்.

Related Stories: