நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இன்று நீட் தேர்வானது நடைபெற உள்ளது. நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வின் நிர்பந்தத்தாலும், அச்சத்தாலும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த நிலையில், நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றனர். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மோதிலால் என்ற 20 வயது இளைஞன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் அமைப்பினர் தேர்வு மையங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
- இந்தியன்
- மாணவர் அமைப்பு எதிர்ப்பு
- பரிசோதனை மையங்கள்
- தேர்வு தேவை
- திருச்செங்கோடு
- நாமக்கல் மாவட்டம்
- ரத்து