டெல்லி: கொரோனா காலத்திற்கு பிறகும் நீதிமன்றங்களில் வீடியோ கான்ஃப்ரன்சிங் முறையிலேயே விசாரணை நடைபெற வேண்டும் என நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா தாக்கம் குறித்த நாடாளுமன்ற குழுவின் முதல் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினரும், குழுவின் தலைவருமான திரு. குபேந்தர் யாதவ் அறிக்கையை மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கைய நாயுடுவிடம் தாக்கல் செய்துள்ளார். கொரோனா காரணமாக வீடியோ கான்ஃப்ரன்சிங் முறை நீதிமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை ஆதரிப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி பரிபாலனை ரீதியாகவும் வீடியோ கான்ஃப்ரன்சிங் முறை சிறந்ததாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.