பெங்களூரு: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் நிரம்பியுள்ளன. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மாதிரியான முன்கள பணியாளர்கள் அவர்களது குடும்பத்தை மறந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் தீஷாவின் பாசப் போராட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர் தீஷா, தனது ஒரு வயது மகனை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.