காரைக்குடி: கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் ஒரு வருடத்துக்கு மேலாக வாழ்ந்த பெண்ணுக்கு இளைஞர்கள் புதிய வீடு கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளனர்.காரைக்குடி காளவாய்பொட்டல் வாணியங்காளி கோவில் பகுதியை சேர்ந்தவர் வேணி. கணவர் விட்டு சென்றதால் 2 குழந்தைகளுடன் சந்தையில் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வீசிய கஜா புயலால் இவரது வீடு முற்றிலும் நாசமானது. வறுமை காரணமாக உடைந்த வீட்டிலேயே தார்ப்பாய் அமைத்து வாழ்ந்து வந்தார். அரசிடம் மனு கொடுத்தும் அனுபவ பத்திரம் என்பதால் புதிய வீடு கட்டிதர முடியாது என கைவிரித்துவிட்டனர்.