துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி..!!

துபாய்: துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடருக்காக 8 அணிகளும் சென்றுள்ளன. கொரோனா பாதிப்பிலிருந்து காக்கும் பொருட்டு வீரர்கள் அங்கு சென்றபின் 6 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இந்த 6 நாட்களில் 3 முறை கொரோனா பரிசோதனை வெவ்வேறு நாட்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் சிஎஸ்கே அணியைத் தவிர மற்ற அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லாததால், அனைவரும் பயிற்சியைத் தொடங்கினர். ஆனால், சிஎஸ்கே அணியின் தீபக் சாஹர், கெய்க்வாட் உள்பட 13 உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் துபாயில் சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்-க்கு விமானத்தில் சென்றபோது பிசிசிஐ மருத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: