தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி, கக்கதாசம், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அந்தேவனப்பள்ளியில் சுறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது, அதில் கடைகள் முன் அமைக்கப்பட்டிருந்த இரும்பு மேற்கூறைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுந்தன.