வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி எஸ்ஐ ஆறுமுகசாமி, கடந்த 27ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த மின்வாரிய ஊழியர் சைமனை சோதனை செய்தார். வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஒரே வாகனத்தில் 3 பேர் வந்துள்ளனர். இதனால் டூவீலரை எஸ்ஐ ஆறுமுகசாமி பறிமுதல் செய்தார். இதுகுறித்து உதவி மின்பொறியாளர் கோபாலசாமியிடம், சைமன் புகார் செய்தார். அவரது உத்தரவிற்கிணங்க கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் மின்வயர் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
