ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது : கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை : ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க்கொல்லி நுழைந்து விடக்கூடாது என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். இன்று கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

ஊருக்கு வழங்கப்பட்ட

ஊரடங்கின் தளர்வில்

உயிர்க் கொல்லி  

நுழைந்துவிடக் கூடாது.

மீண்டும் இயங்கப்போகும்

வாழ்வியல் வெளியில்

கடும் கட்டுப்பாட்டைப்

பெரிதும் கைக்கொள்வீர்

பெருமக்களே!

இது தீப்பிடித்த காடு

பறவைகளே! பத்திரம். எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: