பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

நெல்லை: நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கார்பருவ சாகுபடிக்காக செப்.16 முதல் அக்டோபர் 31 வரை 4,993.92 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க வேண்டும் என்று பழனிசாமி கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழைப்பயிர்களுக்கும், குடிநீர் தேவைக்கும் நீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். 11 கால்வாய்களின் கீழ் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 1,400 மி.கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: