டெல்லி: நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால், பொம்மை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது என குறிப்பிட்டதாக கூறினார். தமிழகத்தில் பெம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது என கூறியிருந்தார். கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொமமைகள். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.