டெல்லி : தீவிரவாதம் என்பது புற்றுநோயை போன்றது என்றும் கொரோனா பெருந்தொற்றை போல் அனைவரையும் பாதிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறியுள்ளார்.டெல்லி எரிசக்தி மற்றும் ஆதாரங்கள் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், ஒட்டுமொத்த மானுடத்தையும் தீவிரவாதம் பாதிப்பதாக கூறினார். கொரோனா போன்ற குறிப்பிட்ட சூழ்நிலை ஏற்பட்டு மக்களை அது பாதிக்கும் போது மட்டுமே உலக அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், தீவிரவாதத்தை நிரந்தரமாக ஒழிப்பது அவசியம் என்று கூறினார்.