திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 1 ஆண்டாக, நடந்து வருகின்றன. இப்பணிகள் தரம் குறைவாகவும், மந்தகதியிலும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மைய பணிகள், குழாய்கள் புதைப்பு பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) சங்கர், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் உள்பட பலர் இருந்தனர்.