தேனி: தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாயில் மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவை மீன்வள சங்கங்கள் சார்பாக மீனவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதனையடுத்து மீனாட்சியம்மன் கண்மாய் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு மீன் குஞ்சிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாலையில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களும் செத்து மிதந்ததால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசியது.